தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்கு படிவம் பெற்று விண்ணப்பிக்கலாம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குச் சாவடி அலுவலர்கள் மற்றும் இதர தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களில் தகுதியானவர்களுக்கு அஞ்சல் வாக்குகள் வழங்கப்படும்.
தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் அஞ்சல் வாக்குகள் பெற படிவம் 15-ல் தங்களது பெயர் எந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பின் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதோ அந்த நகர்புற உள்ளாட்சி அமைப்பின் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வாக்குப்பதிவு நாளுக்கு 7-தினங்களுக்கு முன்னர் சென்றடையும் படி விண்ணப்பித்திட வேண்டும்.
இந்த விண்ணப்பத்துடன் தங்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் பணிக்கான உத்தரவு நகல் ஒன்றினையும் இணைத்து அனுப்ப வேண்டும்.
இந்த விண்ணப்பத்தினை பரிசீலனை செய்து தகுதியான அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்குச் சீட்டுக்களை தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வழங்குவார்கள்.
அஞ்சல் வாக்குச் சீட்டுக்களை பெற விண்ணப்ப படிவங்கள் (படிவம் 15) மாவட்ட ஆட்சியரக உள்ளாட்சி தேர்தல் பிரிவு, நகராட்சி, மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.