இலங்கை கடற்படையால் நடுக்கடலில் சிறைபிடிப்பு: ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர், யாழ்ப்பாணம் சிறையில் அடைப்பு




ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே உள்ள நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது 3 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரத்தை சேர்ந்த 2 விசைப்படகுகளையும், அதில் இருந்த ஆரோக்கியதாஸ், ராஜா, சேவியர், ஜேம்ஸ், ரஞ்சித், முனீசுவரன், ராமன், சேகர், முத்தா, ஜெரெமியஸ், பாதாளம், நெப்போலியன் ஆகிய 12 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி சிறைபிடித்து, தலைமன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து அங்கிருந்து அவர்களை இலங்கை கடற்படை முகாமில் தனிமைப்படுத்தி தங்க வைத்துள்ளனர். 


கைது செய்யப்பட்டுள்ள அந்த 12 மீனவர்களும் நேற்று மாலை கிளிநொச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 12 மீனவர்களையும் வருகிற 25-ந் தேதி வரையிலும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து, மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். ராமேசுவரம் உள்ளிட்ட தமிழக பகுதியில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படும் சம்பவங்கள் தொடர்வது, தமிழக மீனவர்கள் மத்தியில் வேதனையை அதிகப்படுத்தி உள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments