குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து: கோரிக்கை மனுக்களை பெட்டியில் அளித்த பொதுமக்கள்





தமிழகத்தில், அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் திங்கட்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு மாறாக பொதுமக்கள் மனுக்கள் அளிக்க வசதியாக கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் மனு அளித்து வருகின்றனர். அந்தவகையில் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் திங்கட்கிழமையான நேற்று பொதுமக்கள் பலர் தங்களது கோரிக்கை மனுக்களை அந்த பெட்டியில் அளித்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments