சிறுமிக்கு சைகையால் பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு




புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தாலுகா, கோமாபுரம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 55). இவர் 13 வயது சிறுமிக்கு சைகையால் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புதுக்கோட்டை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரனை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பளித்தார். இதில், பாஸ்கரனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் 4 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது. வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் யோகமலர் ஆஜராகி வாதாடினார். குழந்தைகளுக்கு பாலியல் சீண்டல் மற்றும் பாலியல் தொல்லை அளிக்க எண்ணம் வரும் நபர்களுக்கு தக்க பாடமாக இந்த தீர்ப்பு அமையும் என போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் தெரிவித்துள்ளார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments