காத்திருப்பு போராட்டம்
ஆவுடையார்கோவில் அருகே பலவரசன் ஊராட்சி மாகாளியேந்தல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேலும் இந்த கிராமத்தில் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி கிராமமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து அடிப்படை வசதிகள் கோரி ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழர் தேசம் கட்சியினர் மற்றும் கிராமமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னுரிமை அடிப்படையில் குடிநீர்
இதுகுறித்து தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் தாசில்தார் சிவகுமார், ஆவுடையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பாலசுப்பிரமணியன், குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் பவித்ரா, உதவி பொறியாளர் கிஷோர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கிய பிறகு முன்னுரிமை அடிப்படையில் குடிநீர் வசதி செய்து தருவதாக கூறினார். இதையடுத்து ேபாராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தனிநபர் வீட்டுக்கு போகும் குடிநீர் குழாயை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும் மாகாளியேந்தல் பள்ளிக்கு குடிதண்ணீர் வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர்.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.