ராமநாதபுரத்தை சேர்ந்த மேலும் 6 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது





ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள நம்புதாளை படையாட்சி தெருவை சேர்ந்தவர் குமரேசன் (வயது 40). இவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் நேற்று முன்தினம் நம்புதாளை கிராமத்தை சேர்ந்த முத்துக்குமார் (32), பாலு(47), ரெங்கதுரை (48), கண்மாய்க்கரையான் (64), பூபதி (32), மனோஜ்குமார் (25) ஆகிய 6 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்த போது அந்த பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் நம்புதாளை மீனவர்கள் 6 பேரையும் எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக சிறைபிடித்தனர். அவர்களது நாட்டு படகையும் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர். பின்னர் 6 மீனவர்களும் இலங்கையின் ஊர்க்காவல்துறை ேகார்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி கஜநிதிபாலன், 6 பேரையும் வருகிற 4-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். 

ஏற்கனவே இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 23 பேரும், நாகப்பட்டினம் மீனவர்கள் 21 பேரும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போது மேலும் 6 பேர் சிறைபிடிக்கப்பட்டு இருப்பது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே அனைத்து மீனவர்களையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments