ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள நம்புதாளை படையாட்சி தெருவை சேர்ந்தவர் குமரேசன் (வயது 40). இவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் நேற்று முன்தினம் நம்புதாளை கிராமத்தை சேர்ந்த முத்துக்குமார் (32), பாலு(47), ரெங்கதுரை (48), கண்மாய்க்கரையான் (64), பூபதி (32), மனோஜ்குமார் (25) ஆகிய 6 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்த போது அந்த பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் நம்புதாளை மீனவர்கள் 6 பேரையும் எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக சிறைபிடித்தனர். அவர்களது நாட்டு படகையும் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர். பின்னர் 6 மீனவர்களும் இலங்கையின் ஊர்க்காவல்துறை ேகார்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி கஜநிதிபாலன், 6 பேரையும் வருகிற 4-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஏற்கனவே இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 23 பேரும், நாகப்பட்டினம் மீனவர்கள் 21 பேரும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போது மேலும் 6 பேர் சிறைபிடிக்கப்பட்டு இருப்பது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே அனைத்து மீனவர்களையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.