தமிழகத்தில் கிராமப்புற அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அரசு தேர்வுத் துறையால் ஆண்டு தோறும் தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. கிராமப்புற அரசு பள்ளிகளில், 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் வகையில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் மாவட்டத்துக்கு 50 மாணவர்கள், 50 மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிளஸ்-2 வகுப்பு முடிக்கும் வரை 4 ஆண்டுகளுக்கு தலா ரூ.1,000 வீதம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இத்தேர்விற்கு ஊரக பகுதியில் அதாவது கிராமப்புற பஞ்சாயத்து மற்றும் டவுன்சிப் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2021-2022-ம் கல்வியாண்டில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகள் இத்திறனாய்வு தேர்வு எழுதுவதற்கு தகுதி படைத்தவராவார்கள். நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் படிக்கும் மாணவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவராவர்.
18 மையங்கள்
இந்த ஊரக திறனாய்வு தேர்வானது புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், இலுப்பூர், மணமேல்குடி, ஆலங்குடி, விராலிமலை, கீரனூர், கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, பொன்னமராவதி, புதுக்கோட்டை உள்பட 18 மையங்களில் நடைபெற்றது.
இத்தேர்வை எழுத மொத்தம் 3 ஆயிரத்து 634 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 3 ஆயிரத்து 523 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். தேர்வு நடைபெற்றதை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாமி.சத்தியமூா்த்தி ஆய்வு மேற்கொண்டார்.
இதேபோல ஆங்காங்கே கல்வி மாவட்ட அதிகாரிகள் மஞ்சுளா, மணிமொழி, ராஜாராமன் ஆகியோர் பார்வையிட்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.