கடந்த 18-02-2022 வெள்ளிக்கிழமை, மீமிசல் சுந்தரவடிவேலு கிளினிக் அருகில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்-ல் பணம் எடுக்கச் சென்ற பெண், ஏற்கனவே ஏடிஎம் மிஷினில் பணம் எடுக்கும் பகுதியில் இருந்த ரூபாய் 4 ஆயிரம் ரொக்கப் பணத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்பு அந்தப் பணத்துக்கு உரியவர் யாரும் இருக்கிறார்களா என தேடிப் பார்த்தார். ஏடிஎம் மையத்திற்கு வெளியில் யாரும் இல்லாததால் அந்தப் பணம் தவறுதலாக விட்டுச் சென்றிருக்கலாம் என நினைத்து, அதை உரிய நபரிடம் ஒப்படைப்பதற்காக அந்த பணத்தை எடுத்து, உதவிக்காக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் மீமிசல் பகுதி நிர்வாகிகளை தொடர்பு கொண்டார்.
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ஆலோசனைப்படி அன்றைய தினமே சம்பந்தப்பட்ட வங்கி மேலாளருக்கு போன் மூலம் தகவல் சொல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பின்பு பணி நாளான இன்று திங்கள்கிழமை, கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகளின் உதவியுடன் முறைப்படி ரூபாய் 4 ஆயிரம் ரொக்கப் பணம் பாரத் ஸ்டேட் வங்கி மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. நேர்மையாக நடந்து கொண்ட அந்த பெண்ணுக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது...
தகவல்:
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
மீமிசல் நகரம்,
புதுக்கோட்டை மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.