பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே திருப்பாலைவனத்தை அடுத்த பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வசந்த். இவரது மூன்றரை வயது ஆண் குழந்தை சஞ்சீஸ்வரன். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சஞ்சீஸ்வரன், அங்கு சமையலுக்கு நறுக்கி வைத்திருந்த தேங்காய் துண்டை எடுத்து சாப்பிட்டான்
அப்போது, தேங்காய் துண்டு தொண்டையில் சிக்கிக் கொண்டதால் மூச்சு திணறிய சஞ்சீஸ்வரன் மயங்கி விழுந்தான். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், சஞ்சீஸ்வரனை பழவேற்காடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற சஞ்சீஸ்வரன், மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தான்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, சஞ்சீஸ்வரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதுகுறித்து, திருப்பாலைவனம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.