புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பகுதியில் நடைபெற்ற சுப்பிரமணியசாமி கோயில் கும்பாபிஷேகம் நிகழ்வில், சகோதரத்துவத்துடன் முஸ்லிம் மக்கள் சீர்வரிசையுடன் கலந்துகொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.புதுப்பட்டினம் வள்ளி தேவசேநா உடனுறை சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயிலின் அனைத்து பகுதிகளிலும் திருப்பணி மேற்கொள்ளப்பட்டது. பிப்.17-ம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகளுடன் தொடங்கி கும்பாபிஷேகம் நேற்று 6-ம் கால யாக பூஜைகளுடன் நிறைவுற்றதையடுத்து புனித நீர் எடுத்துச் செல்லப்பட்டு கும்பத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனிடையே, கோயில் கும்பாபிஷேகம் நிகழ்வையொட்டி, ஆர்.புதுப்பட்டினம் முஸ்லிம் ஜமாத்தைச் சேர்ந்தோர் நேற்று இரவு குதிரை, மேலதாள இசை முழங்க ஊர்வலமாக வந்து கோயிலுக்கு சீர் வரிசை பொருட்கள் கொண்டுத்தனர்.
முன்னதாக, கோயிலுக்கு வந்த முஸ்லிம் மக்களை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் வரவேற்று, கோயிலில் அமரச் செய்து உபரிசரித்தனர்.
கோயில் கும்பாபிஷேகத்துக்கு வருகை தந்தோரை வரவேற்று பிரதான சாலையில் ஜமாத் சார்பில் பேனர் வைக்கப்பட்டதோடு, வந்திருந்தோருக்கு குடிநீர் பாட்டில்களும் விநியோகிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சமூக நல்லிணக்கத்துடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியால் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.