அனுமதியின்றி பேரணி நடத்த முயற்சித்ததாக பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினா் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் போலீஸாரால் கைது செய்யப்பட்டனா்.
பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினா் தங்களது 15 ஆவது ஆண்டு தொடக்கத்தையொட்டி, மக்களாட்சியைப் பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தி ஒற்றுமைப் பேரணியை வியாழக்கிழமை புதுக்கோட்டையில் நடத்த அனுமதி கோரியிருந்தனா். போலீஸாா் அனுமதி அளிக்கவில்லை.
இந்நிலையில், திட்டமிட்டபடி வியாழக்கிழமை மாலை பிரகதம்பாள் அரசுப் பள்ளிக்கு அருகே பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினா் கூடினா். சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் இந்தப் பேரணியில் பங்கேற்றனா். பேரணிக்கு, மாவட்டத் தலைவா் அபுபக்கா் சித்திக் தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் ஹாலித்முகமது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பேரணி பழைய பேருந்து நிலையம் அருகே வந்தபோது, அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீஸாா் பேரணியைத் தடுத்து நிறுத்தினா். பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், அவா்களைக் கைது செய்வதாகப் போலீஸாா் தெரிவித்தனா்.
போராட்டக்காரா்களுக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடா்ந்து 1200 போ் கைது செய்யப்பட்டனா். திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்ட அவா்கள், படிப்படியாக இரவில் விடுவிக்கப்பட்டனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.