விபத்தில் கையை இழந்த பெண்; செயற்கை கை பொருத்தி உதவிய புதுக்கோட்டை அரசு மருத்துவர்கள்!




செயற்கை கையை தனியார் மருத்துவமனையில் பொருத்துவதற்கு ரூ.2 லட்சம் செலவாகும். புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இலவசமாகப் பொருத்தப்பட்டிருக்கிறது.


புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கிள்ளுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராகிணி (32). கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, இயந்திர வேலை பார்த்துக்கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் அவரது வலது கை துண்டாகியது. உடனடியாகத் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உயிர் பிழைக்க வைத்துவிட்டனர்.

ஆனாலும், வலது கையை இழந்து 20 ஆண்டுகளாகச் சிரமப்பட்டுக்கொண்டிருந்த ராகிணிக்கு, புதுக்கோட்டை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் இப்போது செயற்கை கை பொருத்தப்பட்டு, அவரது பல்லாண்டு துன்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றனர் மருத்துவர்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments