நாகுடியில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்




காவிரியின் குறுக்கே அணை கட்டும் கா்நாடக அரசின் முயற்சியைக் கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி பேருந்து நிலையம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் ஒன்றியச் செயலா் தண்டாயுதபாணி தலைமை வகித்தாா். சங்கத்தின் தேசியக்குழு உறுப்பினா் மு. மாதவன், மாவட்டச் செயலா் எஸ்.சி. சோமையா, மாவட்டத் துணைச் செயலா் செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் துணைச் செயலா் ராஜேந்திரன், கல்லணைக் கால்வாய்ப் பாசன சங்கத்தின் தலைவா் ரமேஷ், ஒருங்கிணைப்பாளா் அத்தாணி ராமசாமி, பொருளாளா் கோவிந்தராஜ் உள்ளிட்டோா் பேசினா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments