கோபாலப்பட்டிணம் செய்யது முகம்மது ஒலியுல்லா தர்ஹா கந்தூரி விழா






கோபாலப்பட்டிணம் செய்யது முகம்மது ஒலியுல்லா தர்ஹா கந்தூரி விழாவை முன்னிட்டு தேங்காய் சோறு வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் சின்ன பள்ளிவாசல் என்று அழைக்கப்படும் செய்யது முகம்மது ஒலியுல்லா தர்ஹா அமைந்துள்ளது. 

இந்த தர்காவில் வருடம் வருடம்  ஷாபான் பிறை 5-ஆம் நாள் கொடி ஏற்றப்பட்டு பத்து நாட்களுக்கு தினமும் மவுலது ஓதப்பட்டு நேர்ச்சை வழங்கப்படும். 

பிறகு ஷாபான் பிறை 15-ஆம் நாள் அன்று ஊர் பொதுமக்களுக்கு உணவு (தேங்காய் சோறு) வழங்கப்படும். அதனடிப்படையில் நேற்றைய தினம் 19.03.2022 அன்று 11 மணியளவில் தேங்காய் சோறு வழங்கப்பட்டது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நின்று வாங்கி சென்றனர்.

ஒரு டோக்கனின் விலை ரூ.100 என நிர்ணைக்கப்பட்டு ஜமாஅத் நிர்வாகம் சார்பில் வசூல் செய்யப்பட்டு தேங்காய் சோறு வழங்கப்பட்டது.








18-03-2022 வெள்ளிக்கிழமை இரவு வன்ன விளக்குகளால் ஒளிர்ந்த சின்ன பள்ளிவாசல் செய்யது முகம்மது ஒலியுல்லா தர்ஹா






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments