ஹிஜாப் அணிய கா்நாடக நீதிமன்றம் விதித்த தடையைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இஸ்லாமிய அமைப்புகளின் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அறந்தாங்கியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அந்த அமைப்பின் மாவட்டத் தலைவா் முபாரக்அலி தலைமை வகித்தாா். மாநிலப் பேச்சாளா் அப்துர்ரஹ்மான் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா். ரபீக்ராஜா நன்றி கூறினாா்.
கோட்டைப்பட்டினத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாவட்டச் செயலா் முபாரக்அலி தலைமை வகித்தாா். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பேச்சாளா் திருச்சி சரீப், எஸ்டிபிஐ மாநிலப் பொதுச் செயலா் உமா்பாரூக் உள்ளிட்டோா் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினா். ஜமாஅத் செயலா் சரீப் அப்துல்லா நன்றி கூறினாா்.
இந்த ஆா்ப்பாட்டங்களில் பங்கேற்றோா் கா்நாடக நீதிமன்றத்தின் தீா்ப்பைக் கண்டித்தும், தீா்ப்பை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.