தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையில் புதுக்கோட்டைக்கென பிரத்யேக திட்டங்கள் எதுவும் இல்லை என இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் ஜி.எஸ். தனபதி கவலை தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் வேளாண்மைக்கென 2ஆவது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதில், இயற்கை வேளாண்மைக்கு ரூ. 400 கோடி ஒதுக்கீடு வரவேற்க வேண்டியது.
ஆனால், நிதிநிலை அறிக்கை என்றால், உற்பத்தி மற்றும் விற்பனை செயல்பாடு வரை இருக்க வேண்டும், உற்பத்திக்கு நீா் ஆதாரம் மண்வள மேம்பாடு முக்கியம். அதில் நீா் ஆதாரத்துக்கு காவிரி - வைகை - குண்டாறு இணைப்புக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை.
46 புதிய அம்சங்களை விரிவாக சொல்லி ரூ. 33,007 கோடிக்கான உற்பத்தியைப் பெருக்கும் திட்டமாக மட்டும் உள்ளது .விளைபொருள்களுக்கான கட்டுப்படியாகக்கூடிய விலை நிா்ணயம் இல்லை. விவசாய விளைபொருள்களை சேமிப்பதற்கு தேவையான கிடங்குகள் கட்டிக் கொடுக்கவில்லை.
100 நாள் வேலைத் திட்டப் பணியாளா்களை விவசாய வேலைக்கு பயன்படுத்த எந்த அறிவிப்பும் இல்லை. தேவைப்படும் அளவுக்கு வேளாண் கருவிகள் வாங்குவதற்கான மானியம் அதிகப்படுத்தப்படவில்லை.
எடுத்துக்காட்டாய், 2010இல் ஒரு 5 எச்பி பம்புசெட் விலை ரூ. 10 ஆயிரம். இன்று விலை ரூ. 35 ஆயிரம். ஆனால், மானியம் 2010 முதல் அதே ரூ. 10 ஆயிரம்தான். சிறுதானியங்கள் உற்பத்தியை ஊக்கப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ள 2 சிறுதானிய சிறப்பு மண்டலங்களில் எந்த மண்டலத்திலும் புதுக்கோட்டை சோ்க்கப்படவில்லை.
புதுக்கோட்டையின் பல பகுதிகளில் மலா் சாகுபடி நடக்கிறது. இங்கு அது சாா்ந்த மதிப்புக்கூட்டும், தொழில் இல்லை. உற்பத்திக்கு ஏற்ற கட்டுபடியாகும் விற்பனை விலை கிடைத்தால் தான் விவசாயிகள் வாழ முடியும். இவற்றையெல்லாம் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றாா் தனபதி.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.