கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்




கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற்றது.

அரசுப் பள்ளிகளின் முன்னேற்றம் மற்றும் அதன் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காகவும், இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படியும் பள்ளிமேலாண்மைக் குழு ஏற்படுத்தப்பட்டது. பள்ளிக் கல்வித்துறை அரசாணையின்படி, பள்ளி மேலாண்மைக் குழுவை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுகட்டமைப்பு செய்வது அவசியம்.








அதன்படி அனைத்து பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுவை மறுகட்டமைப்பு செய்வதற்குத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 20.03.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் பள்ளி மேலாண்மைக் குழு
 கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர் இளங்கோவன் அவர்கள் வரவேற்பு நிகழ்த்தினார். பள்ளி மேலாண்மைக் குழுவின் அமைப்பு, அதன் செயல்பாடுகள், பள்ளி மேலாண்மைக் குழுவின் முக்கியத்துவம், பெற்றோர்களின் பங்கு மற்றும் அடுத்து நடைபெறும் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு நிகழ்வில் கலந்து கொள்வதின் முக்கியத்துவம் ஆகியவற்றை பெற்றோருக்கு எளிய முறையில் தலைமை ஆசிரியர் விஜயகுமார் எடுத்துரைத்தார். இறுதியில் சுயம்புலிங்கம் ஆசிரியர் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள்.

இந்த கூட்டத்தில் ஆசியர்கள் ஊர் ஜமாஅத் நிர்வாகிகள், ஊராட்சி பிரதிநிதிகள், பெற்றோர்கள், ‌பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments