புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீரின் தரம் ஆய்வு செய்யும் வகையில், பரிசோதனைப் பெட்டி வழங்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் கவிதா ராமு.
புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகத்தில் உலக தண்ணீா் தினத்தையொட்டி குடிநீரின் தரத்தை, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய களப் பரிசோதனைப் பெட்டியின் மூலம் எளிய முறையில் சோதனை செய்யும் செயல்விளக்கத்தைப் பாா்வையிட்ட அவா் மேலும் கூறியது:
தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் மூலம் மழைநீா் சேகரிப்பு, குடிநீா் சிக்கனம், குடிநீா் சுகாதாரம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல் ஜீவன் மிஷன் இயக்கம் மூலம் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் குழாய் இணைப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 ஊராட்சிகளிலும், குடிநீா் தரம் குறித்து களப் பரிசோதனைப் பெட்டி வழங்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்வது தொடா்பான பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது என்றாா் கவிதா ராமு.
நிகழ்வில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. கருப்பசாமி, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய நிா்வாகப் பொறியாளா்கள் அயினான், சிவப்பிரகாசம், உதவி நிா்வாகப் பொறியாளா் இளங்கோவன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) ஸ்ரீராம் உள்ளிடட்டோா் கலந்து கொண்டனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.