புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையர்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் 18.04.2022 திங்கட்கிழமை கோபாலப்பட்டிணம் சமூக சேவை மைய வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ரா.சீதாலெட்சுமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய உதவிப்பொறியாளர் கலையரசன் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் அனைத்து கிராமம் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2021-22 ஆண்டுக்கு தேர்வு செய்யப்பட்ட பணிகள் சரி பார்ப்பு மற்றும் அதனை இறுதி செய்து கிராமசபையில் ஒப்புதல் பெறப்பட்டது.
கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் ஊராட்சி செயலாளர் ஸ்டெல்லா வரவேற்றார்.
கிராமசபையில் ஒப்புதல் பெறப்பட்ட பணிகள்:
கோபாலப்பட்டிணம்:
1.கோபாலப்பட்டிணம் நெடுங்குளம் மேம்பாடு செய்தல் - ரூ.1772000
2. கோபாலப்பட்டிணம் தவ்ஹீத் பள்ளி வாசல் குடியிருப்பு சிமெண்ட் சாலை அமைக்க - ரூ.506000
3.கோபாலப்பட்டிணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கழிப்பறை வசதி அமைத்தம் - ரூ.396000
ஆர்.புதுப்பட்டிணம்:
1.ஆர்.புதுப்பட்டிணம் முஸ்லீம் தெரு குடியிருப்பு சிமெண்ட் சாலை அமைக்க - ரூ.484000
முத்துக்குடா
1.முத்துக்குடாவில் சந்தை அமைத்தல் - ரூ.590000
2.முத்துக்குடா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பெண்கள் கழிப்பறை வசதி அமைத்தல் - ரூ.490000
1.நாட்டாணி குடியிருப்பு சிமெண்ட சாலை அமைத்தல் - ரூ.484000
2.நாட்டாணியில் சமத்துவ சுடுகாடு அமைத்தல்
பசுமை மற்றும் சுத்தமான கிராமம் (பலன் தரும் மரங்கள் வளர்த்து ஊராட்சிக்கு வருமானம் வர வழிவகை செய்தல்) - ரூ.590911
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.