கமுதி: கமுதியில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றிக்கொடுத்து ரூ.50 ஆயிரம் பணத்தை திருடிய மர்ம நபர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேருந்து நிலையம் அருகேயுள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையத்தில், வேலானூருணியைச் சேர்ந்த முதியவர் ராமச்சந்திரன்(62) கடந்த மார்ச் 16-ம் தேதி பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது உதவிக்காக அருகிலிருந்த நபரிடம் ரூ.10,000 பணம் எடுத்துக் கொடுக்கக் கேட்டுள்ளார்.
அந்த நபர் முதியவருக்கு பணம் எடுத்துக் கொடுத்துவிட்டு, முதியவரின் ஏடிஎம் கார்டுக்கு பதிலாக வேறொரு ஏடிஎம் கார்டை கொடுத்து அனுப்பி உள் ளார்.
இதனையடுத்து கடந்த 8-ம் தேதி ராமச்சந்திரன் கமுதி பாரத ஸ்டேட் வங்கிக் கிளைக்கு அடகு வைத்த தனது நகையை திருப்புவதற்காக சென்றுள்ளார். அப்போது அவரது வங்கிக் கணக்கில் பணம் இல்லை என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதியவரின் கையிலிருந்த ஏடிஎம் கார்டும் அவருடையது அல்ல என்பதும், ராணி என்ற பெயரில் உள்ளதும், முதி யவரின் கணக்கிலிருந்து ரூ.50 ஆயிரம் திருடப்பட்டதும் தெரிய வந்தது.
இதுகுறித்து நேற்று ராமச்சந்திரன் கமுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.