விராலிமலையிலிருந்து, புதுக்கோட்டை நோக்கி வந்த கார் ஒன்று சத்திரம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து மர நிழலில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த மூவர் மீதும் கடுமையாக மோதியது. அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகேயுள்ள கோத்திராப்பட்டி சரளப்பட்டியைச் சேர்ந்தவர் பொய்யான் (50). இவர் மனைவி செல்லம் (45). அதே பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன் (53). இவர்கள் பொய்யானின் மகனுக்குப் பெண் பார்ப்பதற்காக இலுப்பூரிலிருந்து டூ வீலரில் புதுக்கோட்டைக்குச் சென்றுவிட்டு, மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அன்னவாசல் அருகே சத்திரம் சாலையில் வந்தபோது, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், களைப்படைந்த மூன்று பேரும் சாலையோரத்தில் உள்ள மர நிழலில் டூ வீலரை நிறுத்திவிட்டு சற்றே ஓய்வெடுத்தனர். அப்போது விராலிமலையிலிருந்து, புதுக்கோட்டை நோக்கி வந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து மர நிழலில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த மூவர் மீதும் கடுமையாக மோதியது. இதில், தியாகராஜன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
படுகாயமடைந்த பொய்யான், அவர் மனைவி செல்லம் இருவருக்கும் ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தகவலறிந்த அன்னவாசல் போலீஸார், தியாகராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து, இது குறித்து அன்னவாசல் போலீஸார் வழக்கு பதிந்து, காரை ஓட்டி வந்தது யார் என்பது குறித்து தொடர் விசாரணை நடத்திவருகின்றனர். வெயிலுக்கு ஓய்வெடுத்தபோது, எதிர்பாராதவிதமாக கார் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.