பொன்னமராவதி அருகே வலையப்பட்டி சங்கரன்குண்டு தெற்கு வீதியில் வசித்து வருபவர் விசாலாட்சி (வயது 74). நேற்று அப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் விசாலாட்சியிடம் சென்று அப்பகுதியில் சற்றுமுன் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனால் நீங்கள் அணிந்திருக்கும் நகையை இதில் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள் எனக்கூறி ஒரு பையை கொடுத்து உள்ளனர். இதைதொடர்ந்து அவர்களே மூதாட்டி அணிந்திருந்த 5 பவுன் தாலிச்சங்கிலி, வளையல் 4 பவுன் உள்ளிட்ட 9 பவுன் நகைகளை பையில் வைத்து தருவதாக கூறி வாங்கி பையை திரும்பவும் கொடுத்துள்ளனர். வீட்டில் வந்து மூதாட்டி பையை பார்த்தபோது அதில் மண்ணும், கல்லும் இருந்தது தெரியவந்தது. இது குறித்து பொன்னமராவதி போலீஸ் நிலையத்தில் விசாலாட்சி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.