அறந்தாங்கி அருகே அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதல் - லாரி டிரைவர் சம்பவ இடத்திலேயே பலி





அறந்தாங்கி அருகே குன்னகுரும்பியில் அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில்  சம்பவ இடத்திலேயே லாரி ஓட்டுநர் உடல் நசுங்கி பலி 16 பேர் காயம்

அறந்தாங்கி அருகே எரிச்சி கிராமத்தை சேர்ந்தவர் முகமது மகதீர் (32) லாரி டிரைவர் இவர் அரசுக்குச் சொந்தமான நெல் குடோனில் நெல்லை ஏற்றிக்கொண்டு அறந்தாங்கி புதுக்கோட்டை சாலையில் குன்னக்குரும்பி அருகே வந்தபோது திருப்பூர்ரிலிருந்து அறந்தாங்கி வந்த அரசு பேருந்து மோதியது இதில் சம்பவ இடத்திலேயே லாரி டிரைவர் முகமது மகதீர் உயிரிழந்தார்.

அதன் பின்னர் லாரியின் முகப்பில் உட் பகுதியில் சிக்கியிருந்த டிரைவரின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர் மீட்கப்பட்ட உடலை அறந்தாங்கி டிஎஸ்பி தினேஷ் குமார் தலைமையில் உடலை கைப்பற்றி அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் அரசு பஸ்சில் பயணம் செய்த 13 பேருக்கு காயம் ஏற்பட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் இதுகுறித்து அறந்தாங்கி டிஎஸ்பி தினேஷ்குமார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார் விபத்து காரணமாக அறந்தாங்கி - புதுக்கோட்டை சாலையில் 2மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது










எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments