பட்டுக்கோட்டையில் ரெயில் தண்டவாளம் அருகே நாய் கடித்து குதறிய நிலையில் கிடந்த ஆண் குழந்தையின் பிணத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ரெயில் நிலையம் அருகே நாய்கள் கடித்துக் குதறிய நிலையில் ஆண் குழந்தை உடல் கிடந்தத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில்,
பட்டுக்கோட்டை பஸ் நிலையம் அருகே நாடியம்மன் கோவில் செல்லும் சாலையில் ரெயில் தண்டவாளத்தின் அருகே இன்று காலை பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை பிணம் கிடந்தது.
இதை அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய்கள் கடித்து குதறியதில் கை, கால்கள் துண்டு துண்டாகக் கிடந்தது. நாய்கள் கூட்டமாக சுற்றி வந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் சென்று பார்த்த போது ஆண் குழந்தை பிணம் கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து அங்கிருந்து தெரு நாய்களை விரட்டிய பொதுமக்கள் ரெயில் நிலையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். ஆனால் சம்பவ இடத்திற்கு பல மணி நேரமாகியும் ரெயில்வே போலீசார் வராததால் இதையடுத்து பட்டுக்கோட்டை போலீஸ் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
பட்டுக்கோட்டை நகர போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.