கோட்டைப்பட்டினம் கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் கடல் பசு ஒன்று கரை ஒதுங்கியிருந்தது. இதைப்பார்த்த அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் இதுகுறித்து கடலோர காவல் குழுமம் மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், அங்கு வந்த வனத்துறையினர் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் பசுவை கைப்பற்றி அதே பகுதியில் புதைத்தனர். மேலும் கடல் பசு எவ்வாறு இறந்தது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் இறந்து கரை ஒதுங்கிய கடல் பசுவின் ஒரு பகுதி அறுத்து எடுக்கப்பட்ட நிலையில் இருந்தது போல் தெரிகிறது.
இதனால் யாரேனும் உணவிற்காக சதையை அறுத்து எடுத்துவிட்டு கடல் பசுவை அப்படியே கடலில் தூக்கி வீசி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து வனத்துறை அதிகாரி கூறுகையில், கடல் பசு பாதுகாக்கப்பட்ட உயிரினமாகும். கடல் பசுவை வேட்டையாடுவது சட்ட விரோதமான செயலாகும். இதுபோன்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.