அறந்தாங்கி பட்டுக்கோட்டை வழியாக எர்ணாகுளம் - வேளாங்கண்ணி இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம் தெற்கு ரயில்வே அறிவிப்பு






அறந்தாங்கி பட்டுக்கோட்டை வழியாக எர்ணாகுளம் - வேளாங்கண்ணி இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எர்ணாகுளம் -  வேளாங்கண்ணி - எர்ணாகுளம் இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அடுத்த மாதம் ஜுன் 4 முதல் இயக்கப்படுகிறது.



திருவாரூர் - காரைக்குடி வழியாக இருந்த மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்டு வந்த எக்ஸ்பிரஸ் ரயில் சேவை கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது.
மீட்டர் கேஜ் பாதைகள் அகற்றப்பட்டு அகல ரயில்பாதை அமைக்கும் பணியும், திருவாரூர் - காரைக்குடி இடையே உள்ள அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் ரயில் நிலையங்கள் சீரமைக்கப்பட்டன.

அகல ரயில் சேவை 

கடந்த 2019 ஆம் ஆண்டு திருவாரூர் - காரைக்குடி இடையே ரயில் சேவை தொடங்கப்பட்டது. ஆனால், கேட் கீப்பர் இல்லாத காரணத்தால் பல இடங்களில் நிறுத்தி நிறுத்தி ரயில்கள் இயக்கப்பட்டன. இதனால் பயண நேரம் தாமதமானது. 2 ஆண்டுகளுக்கு பிறகு கேட் கீப்பர்கள் நியமிக்கப்பட்டதால் தற்போது பயண நேரம் பாதியாக குறைந்துள்ளது. இருப்பினும் அகல ரயில்பாதை அமைக்கப்பட்டு 4 ஆண்டுகளாகியும் இப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையான சென்னைக்கு நேரடி ரயில் இயக்க வேண்டும் என்பது நிறைவேற்றபடாத ஒன்றாகவே இருந்து வருகிறது.
 
மக்கள் கோரிக்கை

இப்பகுதியை சேர்ந்த ரயில் பயணிகள் ஏதாவது ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலையாவது இவ்வழியாக இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். குறிப்பாக கேரளாவிலிருந்து வேளாங்கண்ணி மாதா கோயில் மற்றும் நாகூர் தர்காவுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவர்களின் வசதிக்காக கேரள மாநிலம் எர்ணாகுளத்திலிருந்து நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு ரயில் இயக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்தனர்.

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி - எர்ணாகுளம்

இரண்டு மார்க்கத்திலும் 10 முறை இந்த ரயில்கள் இயக்கப்படுகிறது

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி 
 
வருகிற ஜூன் 04  முதல் ஆகஸ்ட்  06 தேதி வரை இந்த ரயில் இயக்கப்படுகிறது

அனைத்து சனிக்கிழமைகளும் மதியம் 12.35 மணிக்கு எர்ணாகுளத்தில் புறப்பட்டு இந்த ரயில் காலை 5.50 மணி அளவில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் வேளாங்கண்ணி சென்றடையும்.   

வேளாங்கண்ணி - எர்ணாகுளம்

வருகிற ஜூன் 05  முதல் ஆகஸ்ட்  07 தேதி வரை இந்த ரயில் இயக்கப்படுகிறது

அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாலை‌ 6.30 மணியளவில் வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு இந்த ரயில் அனைத்து திங்கட்கிழமைகளிலும்  காலை 12.00 மணிக்கு  எர்ணாகுளம் சென்றடைகிறது.

வழித்தடம்

இந்த ரயில் கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கன்னூர், மாவேலிக்கரா, காயங்குளம், சாஸ்தான்கோட்டா கொல்லம், கொண்டாரா, கொட்டாரக்கரா,  புனலூர், தென்மலை செங்கோட்டை, கடையநல்லூர் சஙக்ரன்கோவில் ,ராஜாபாளையம்   , சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை,  காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் , திருத்துறைப்பூண்டி திருவாரூர், நாகப்பட்டினத்தில் நின்று செல்லும்.


மக்கள், பக்தர்கள் மகிழ்ச்சி

அதேபோல், வேளாங்கண்ணியிலிருந்து மாலை 6:30 மணிக்கு புறப்படும் ரயில் அதே மார்க்கத்தில் உள்ள ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டு மறுநாள் மதியம் 12:00 மணிக்கு எர்ணாகுளம் சென்றடைகிறது. வாரம் 2 நாட்கள் இயக்கப்படும் இந்த ரயிலில் 14 பெட்டிகள் பொறுத்தப்பட்டிருக்கும். இந்த புதிய ரயில் சேவையால் இந்த மார்க்கத்தில் உள்ள பொதுமக்கள், பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments