புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் ஒன்றியம், நாட்டானிபுரசகுடி ஊராட்சியைச் சேர்ந்த கோபாலப்பட்டிணம் ஆலமரம் பகுதியில் அமைந்துள்ள முக்கிய குடிநீர் திறக்கும் வால்வு தற்பொழுது குப்பைகளால் முழுமையாக மூடப்பட்டு ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.
இப்பகுதியில் தினசரி சேகரித்து கொட்டப்படும் குப்பைகள் முறையாக அப்புறப்படுத்தப்படாததால், இந்த குடிநீர் வால்வு இருக்கும் இடமே தெரியாத அளவிற்கு குப்பைக் கழிவுகள் சூழ்ந்துள்ளன. மேலும், இப்பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை சில நேரங்களில் தீயிட்டு கொளுத்தி வருகின்றனர். இதனால் ஏற்படும் கடுமையான வெப்பத்தின் காரணமாக, பிளாஸ்டிக் பொருட்களால் ஆன இந்த முக்கிய குடிநீர் வால்வு பலமுறை தீயில் கருகி தற்பொழுது பலத்த சேதமடைந்துள்ளது.
தற்போதைய நிலையில் இந்த வால்வு பகுதியளவு பாதிக்கப்பட்டுள்ளதால், இப்பகுதிக்கான குடிநீர் விநியோகத்தில் எப்போது வேண்டுமானாலும் தடை அல்லது பெரும் பாதிப்பு ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது. மேலும், தீ வைக்கும் சமயங்களில் நிலத்தடி நீர் குழாய்களும் சேதமடையும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
எனவே, இப்பகுதியில் ஏதேனும் பெரிய அளவிலான குடிநீர் விநியோகப் பாதிப்போ அல்லது விபத்தோ ஏற்படுவதற்கு முன்பாக, அங்கு தேங்கிக் கிடக்கும் குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மேலும், சேதமடைந்துள்ள குடிநீர் திறக்கும் வால்வைச் சீரமைத்து, உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி மன்ற செயலாளருக்கு அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:



0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.