குவைத்தில் உயிரிழந்த குமரவேல் அய்யாக்கண்ணு அவர்களின் உடல் சென்னை விமான நிலையத்தில் விரைவாக Clearance செய்து குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. --






குவைத்தில் உயிரிழந்த குமரவேல் அய்யாக்கண்ணு அவர்களின் உடல் சென்னை விமான நிலையத்தில் விரைவாக Clearance செய்து குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இது குறித்து இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி MP வெளியிட்டுள்ள முகநூல் பக்கத்தில்

வெளிநாட்டு வாழ் தமிழர்களின் கோரிக்கையை ஏற்று, வெளிநாட்டில் உயிரிழந்தவர்களின் உடல்கள் சென்னை விமான நிலையத்தில் விரைவாக Clearance செய்வதற்கு என்னுடைய அலுவலகத்தை அணுகலாம் என அறிவித்திருந்தேன்.

அதனையடுத்து குவைத் வெளிநாடு வாழ் தமிழர் நல சங்கத்தின் மூலமாக குவைத்தில் உயிரிழந்த தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த குமரவேல் அய்யாக்கண்ணு  அவர்களின் உறவினர்கள் அவரது உடலை சென்னை விமான நிலையத்தில் Clearance செய்ய உதவிடுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இன்று காலை 9 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்த குமரவேல் அய்யாக்கண்ணு அவர்களின் உடல் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலக உதவியாளர்கள் மூலம் முழுமையாக அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு விரைவாக Clearance செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அறிவித்ததை அடுத்து வந்த முதல் கோரிக்கை விரைவாக செய்து கொடுக்கப்பட்டது.

வெளிநாட்டு வாழ் தமிழ் உறவுகள் இதுபோன்ற கோரிக்கைக்கு தொடர்ந்து அணுகலாம், அனைத்து உதவிகளுக்கும் எப்போதும் என்னுடைய அலுவலகம் தயாராக இருக்கும்.
--
கே நவாஸ்கனி
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்,
மாநில துணைத் தலைவர் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments