தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கடந்த மாதம் (மே) நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வுகளை எழுதினர். தேர்வு முடிவடைந்ததும் விடைத்தாள்கள் அனைத்தும் அந்தந்த மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்த 2 மையங்களும், பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்த 3 மையங்களும் என மொத்தம் 5 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விடைத்தாள்கள் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்திலும் நேற்று விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது.
2 லட்சம் விடைத்தாள்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 மையங்களில் முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வு அலுவலர்கள் ஆகியோர் விடைத்தாள்களை திருத்தினர். இன்று (வியாழக்கிழமை) முதல் இவர்களுக்கு கீழ் ஆசிரியர்கள் விடைத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபடுவார்கள்.
5 மையங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெறுகிறது. இந்த பணிகள் திட்டமிட்டப்படி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.