முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 8-ந் தேதி புதுக்கோட்டை வருகிறார். புதுக்கோட்டை: தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் வாரியாக சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கியும், ஆய்வும் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் புதுக்கோட்டைக்கு வருகிற 8-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தருகிறார். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இந்த விழாவானது புதுக்கோட்டையில் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது. இதற்காக விழா மேடை, பந்தல் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. இதற்கான கால்கோள் நடும் விழா நேற்று மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கினார்.
இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பந்தக்காலை நட்டனர். நிகழ்ச்சியில் முத்துராஜா எம்.எல்.ஏ., முன்னாள் அரசு வழக்கறிஞர் செல்லப்பாண்டியன், புதுக்கோட்டை நகராட்சி தலைவர் திலகவதி செந்தில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் த.ஜெயலட்சுமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்உதயம் சண்முகம், நகர்மன்ற துணைத் தலைவர் லியாகத்அலி உள்பட அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.