புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே ஆவுடையார்பட்டினத்தில் தொழில் அதிபர் முகமது நிஜாமை (வயது 53) கொலை செய்து 170 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் தொடர்பாக மணமேல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 9 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கைதானவர்களிடம் இருந்து மொத்தம் 79 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. மீதமுள்ள 91 பவுன் நகைகள் மீட்கப்பட வேண்டி உள்ளது.
இந்த வழக்கில் கைதான யூனுஸ் என்பவர் 40 பவுன் நகைகளை கேரளாவில் விற்றதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து அந்த நகைகளை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
கேரளா விரைந்தனர்
இந்த வழக்கில் கைதாகி புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட கதிரவன், ஜோஸ்மில்டன், யூனுஸ் ஆகிய 3 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் அனுமதி பெறப்பட்டது. இதில் கதிரவன், ஜோஸ்மில்டன் ஆகியோரிடம் 2 நாட்கள் விசாரணை நடத்தப்பட்ட பின் மீண்டும் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
யூனுசை மட்டும் காவலில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் அவர் விற்ற நகைகளை மீட்க போலீசார் யூனுசை அழைத்து கொண்டு கேரளா விரைந்துள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.