புதுக்கோட்டையில் அக்னி நட்சத்திரம் முடிந்த பின்பும் வெயில் கொளுத்துகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
கோடை காலம்
தமிழகத்தில் கோடை காலமாக கருதப்படும் ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். மேலும் அக்னி நட்சத்திரம் எனப்படும் காலகட்டத்தில் வெயிலின் உக்கிரம் அதிகமாகும். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் வெயில் சுட்டெரித்தது. அக்னி நட்சத்திரம் கடந்த மே மாதம் 4-ந் தேதி தொடங்கி 28-ந் தேதியுடன் முடிவடைந்தது.
இந்த கால கட்டத்தில் வெயில் கடுமையாக இருந்தது. அக்னி நட்சத்திரம் தொடக்கம் மற்றும் நிறைவு நாளில் மட்டும் லேசாக கோடை மழை பெய்தது. இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் முடிந்ததும் வெயிலின் தாக்கம் குறைந்து விடும் என பொதுமக்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
கொளுத்தும் வெயில்
இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் முடிவடைந்த பின்பும் புதுக்கோட்டையில் வெயில் கொளுத்துகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இரவிலும் வெப்பத்தின் தாக்கம் இருப்பதால் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதற்கிடையில் திடீரென மின்வெட்டும் ஏற்படுவதால் மக்கள் படும் அவஸ்தை சொல்லிமாளாது.
மே மாதம் முடிந்து ஜூன் மாதம் பிறந்தும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. நாளுக்கு நாள் அதிகரித்தப்படியே உள்ளது. பகலில் வெளியில் செல்லும் பொதுமக்கள் வெப்ப தாக்கத்தால் அல்லல்படுகின்றனர். வெயிலின் தாக்கம் எப்போது குறையுமோ? என பொதுமக்கள் ஏக்கத்தில் தவித்து வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.