மீமிசலில் தமுமுக நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்




மீமிசலில் தமுமுக நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 

அண்ணல் நபிகளார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த பாஜகவை சேர்ந்த  நுபுல் சர்மா மற்றும் நவீன் ஜின்டாலை UAPA என்ற பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டி மீமிசல் கடைவீதியில் நேற்று 10.06.2022 வெள்ளிக்கிழமை  மாலை 5.00 மணியளவில்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

ஆவுடையார் கோவில் ஒன்றிய தலைவர் அபுதாஹிர் தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் ஜலீல் அப்பாஸ் தொடக்க உரை நிகழ்தினார் மாவட்ட பொருளாளர் ஜகுபர் அலி மமக மாவட்ட செயலாளர் அபுசாலிகு கண்டன கோசம் எழுப்பினர் மாவட்ட தலைவர் B.சேக் தாவூதீன் மற்றும் தொண்டி பெரிய பள்ளிவாசல் இமாம் மொளவி காசிம் ஹசரத் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள்

இதில் மாவட்ட முன்னாள் நிர்வாகிகள் நகர ஒன்றிய  கிளை நிர்வாகள் உள்ளூர் ஜமாத்தார்கள் மற்றும் தாய்மார்கள் உட்பட 400- க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்










மாவட்ட மருத்துவ அணி செயலாளர் MSK முகமது சாலிகு நிகழ்ச்சி தொகுத்து வழங்கினார்

தகவல் 

தமுமுக ஊடகப்பிரிவு 
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments