சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க கூடாது என்ற தமிழக அரசின் ஆணைக்கு இடைக்கால தடை கோரி விழுப்புரம் மாவட்டம் பனிச்சமேடு குப்பத்தைச் சேர்ந்த ஞானசேகர் உள்ளிட்ட 9 மீனவர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ‘கடலில் 12 கடல் மைலுக்கு மேல் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது.
ஆனால், கடலில் 12 கடல் மைல் சுற்றளவுக்கு சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க தமிழக அரசு 2020-ம் ஆண்டு பிப்ரவரி 17-ந் தேதி தடை விதித்தது. மீன்பிடி தடை காலம் ஜூன் 15-ந் தேதி முடிவடைந்த நிலையில், தமிழக அரசு விதித்துள்ள தடை 15 லட்சம் பேரின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது.
எனவே தமிழக அரசின் ஆணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது. அந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா, விக்ரம்நாத் ஆகியோர் அடங்கிய கோடைகால விடுமுறை அமர்வு விசாரித்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் ஜெயசுகின், மனுவில் கூறப்பட்டுள்ளதை குறிப்பிட்டு வாதிட்டார். மனுவை பரிசீலித்த நீதிபதிகள், சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க கூடாது என்ற தமிழக அரசின் ஆணைக்கு இடைக்கால தடை கோரிய மனு தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசு, தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் மனுக்களை சம்பந்தப்பட்ட அரசு வக்கீல்களுக்கு வழங்கவும் அறிவுறுத்தினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.