கோட்டைப்பட்டினத்தில் புதிதாக அனைத்து மகளிர் காவல் நிலையம் திறப்பு






கோட்டைப்பட்டினத்தில் புதிதாக அனைத்து மகளிர் காவல் நிலையம் திறக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கடலோரப்பகுதிகளில் பெண்களுக்கு எதிராகவும் மற்றும் குழந்தைகளுக்கு எதிராகவும் நடக்கக்கூடிய குற்றங்களை தடுக்கும் வகையில் தமிழக அரசு கோட்டைப்பட்டினம் பகுதியில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைத்துள்ளது. 

இந்த அனைத்து மகளிர் காவல் நிலையத்தை இன்று ஜூன்‌ 16 வியாழக்கிழமை புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திருமதி. நிஷா பார்த்திபன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். 

விழாவில் கூடுதல் துணை கண்காணிப்பாளர் திருமதி.கீதா அவர்கள் கோட்டைப்பட்டினம் துணை கண்காணிப்பாளர் திரு. மனோகரன் அவர்கள் ஊராட்சி மன்ற துணை தலைவர் திரு.அக்பர் அலி அவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர் பெனாசிர் பேகம் கலந்தர் மற்றும் கொடிக்குளம் கிராமத்தார்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.





எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments