ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை உரிய நேரத்தில் ஊழியர் கவனித்து ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து வெள்ளிக்கிழமை காலை தவிர்க்கப்பட்டது.
சென்னை எழும்பூரிலிருந்து ராமேசுவரத்துக்கு பயணிகள் விரைவு ரயில் வியாழக்கிழமை இரவு 7.15 மணிக்குப் புறப்பட்டது. ரயிலானது வெள்ளிக்கிழமை காலை 6.45 மணிக்கு ராமநாதபுரம் ரயில் நிலையம் வந்தடைந்தது. பின் அங்கிருந்து 6.50 மணிக்குப் புறப்பட்டுச் சென்றது. ரயிலானது ராமநாதபுரம்-உச்சிப்புளி இடையேயுள்ள வாலாந்தரவை ரயில் நிலையத்தை காலை சுமார் 7.20 மணியளவில் நெருங்கியது.
அப்போது வாலாந்தரவை ரயில்வே கேட் ஊழியர் வீரப்பெருமாள் தண்டவாளத்தை சரிபார்த்து வந்துள்ளார். ரயில்வே கேட் அருகில் சுமார் 300 மீட்டர் தொலைவில் தண்டவாளத்தின் ஒரு பகுதியில் சுமார் 8 சென்டி மீட்டர் அகலத்துக்கு விரிசல் இருப்பது தெரியவந்தது. விரிசல் கண்டறியப்பட்ட நிலையில் பயணிகள் விரைவு ரயிலும் அப்பகுதியை நெருங்கி வந்தது. உடனே தான் வைத்திருந்த சிவப்புக் கொடியை காட்டியபடி தண்டவாளத்தில் 200 மீட்டருக்கு ஊழியர் வீரப்பெருமாள் ஓடினார். அதைக் கண்ட ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்த முயற்சித்தார்.
அதனால், ரயில் மெதுவாக வந்து விரிசலைக் கடந்து நின்றது. தகவல் அறிந்த மண்டபம் ரயில் நிலைய ஊழியர்கள் விரைந்து வந்து தண்டவாள விரிசலை சீர்படுத்தினர். அதன்பின் ரயிலானது சுமார் ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு புறப்பட்டுச் சென்றது. ரயில் தக்க நேரத்தில் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ரயிலை விபத்திலிருந்து தவிர்க்கும் வகையில் செயல்பட்ட ஊழியர் வீரப்பெருமாளை பொதுமக்களும், பயணிகளும் பாராட்டினர்.
கடந்து சென்ற ரயில்கள் விரிசல் ஏற்பட்ட தண்டவாளத்தை வெள்ளிக்கிழமை அதிகாலை 2 ரயில்கள் கடந்து சென்றதாகவும் கூறப்படுகிறது. ஆகவே விரிசல் எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்படுவதாக அதிகாரிகள் கூறினர். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் தண்டவாளம் சீரமைப்புப் பணியானது நவீன இயந்திர வாகனத்தைக் கொண்டு நடைபெற்றது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.