புதுக்கோட்டை, ஜூலை.26-
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதுக்கோட்டையில் 8 மணி நேரம் தொடர் நடன கலை நிகழ்ச்சி நடத்தி உலக சாதனை படைக்கப்பட்டது.
தொடர் நடன நிகழ்ச்சி
சர்வதேச அளவில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியை பிரபலப்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், புதுக்கோட்டையிலும் செஸ் போட்டி, விழிப்புணர்வு ஊர்வலம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இருப்பினும் மாவட்ட நிர்வாகம் புதுமையாக சிந்தித்து உலக சாதனை படைக்கும் வகையில் தொடர்ந்து 8 மணி நேரம் நடன மாரத்தான் கலை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி, இசைப்பள்ளி மாணவ-மாணவிகள், திருநங்கைகள், நடன கலைஞர்கள் பங்கேற்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. அதன்படி தொடர் நடன மாரத்தான் கலை நிகழ்ச்சி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இதனை மாவட்ட கலெக்டர் கவிதாராமு தொடங்கி வைத்தார்.
கரகம், பரதநாட்டியம்
இந்த கலை நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று பல்வேறு பாடல்களுக்கு நடனமாடினர். மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான விழிப்புணர்வு பதாகைளை கையில் ஏந்தியபடியும் நடனமாடினர்.
நாட்டுப்புற பாடல், சினிமா பாடல்களுக்கும் நடனமாடினர்.
மேலும் பரதநாட்டியம், கரகம் வைத்து நாட்டுப்புற பாடல்களுக்கும் ஆடி மாணவ-மாணவிகள் அசத்தினர். இடைவிடாமல் தொடர்ந்து 8 மணி நேரம் (இரவு 7 மணி வரை) இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
கலை நிகழ்ச்சியை காண மாணவ-மாணவிகள், பொதுமக்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். நிகழ்ச்சியில் தொடர்ந்து பாடல்கள் ஒலிபரப்பப்பட்ட நிலையில் கலையரங்கத்தில் இருந்த மாணவ-மாணவிகளும் உற்சாகத்தோடு நடனமாடி மகிழ்ந்தனர். சதுரங்கா ஒளிரும் முகங்கள் என்ற தலைப்பில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மாணவ-மாணவிகள் செஸ் போட்டியை நினைவூட்டும் வகையிலான அலங்கார ஆடைகளுடன் வேடம் அணிந்து வந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. வர்ஷா என்ற திருநங்கை ஆணி பலகை மீது ஏறி நின்று தலையில் கரகம் வைத்து நடனமாடினார்.
உலக சாதனை
தொடர் நடன நிகழ்ச்சியில் உலக சாதனை
செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதுக்கோட்டையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 8 மணி நேர தொடர் நடன கலைநிகழ்ச்சியில் 1088 மாணவ-மாணவிகள் நடனமாடி, செஸ் தொடர்பாக 2003 தகவல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உலக சாதனை படைத்தனர். ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்சில் இந்த சாதனை இடம்பெற்றதற்கான சான்றிதழை அந்நிறுவன பொறுப்பாளர் விவேக், சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் வழங்கிய போது எடுத்த படம். அருகில் கலெக்டர் கவிதாராமு உள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.