புதுடில்லி: இனிமேல் 17 வயதுக்கு மேற்பட்டவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம் என இந்திய தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே தேர்தலில் ஓட்டளிக்க முடியும் என்பது நடைமுறை. இதற்காக 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்க கோரி இந்திய தேர்தல் கமிஷனிடம் விண்ணப்பிக்கலாம். அதற்காக ஆதார், போட்டோ உள்ளிட்ட ஆவணங்களும் சமர்பிக்க வேண்டும். தேர்தல் கமிஷன் சார்பில் அதனை சரிபார்த்து பின்னர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும். வாக்காளர் பட்டியலில் உள்ளவர்கள் மட்டுமே தேர்தலில் ஓட்டளிக்க முடியும்.
இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான புதிய நடைமுறையை இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. அதன்படி, இனி 17 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களைப் பதிவுசெய்வதற்கு முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம். இதனால் ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி 18 வயதை அடைந்திருக்க வேண்டும் என காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும், இனி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய 4 மாதங்களின் 1ம் தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாய்ப்பு வழங்கப்படும் எனவும் இந்திய தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.