உதவித்தொகை பெற மாற்றுத்திறனாளிகள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் 15-ந் தேதி கடைசி நாள்




            புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.2 ஆயிரம் பெறும் மாற்றுத்திறனாளிகள் வாழ்நாள் சான்று மற்றும் நாடுமுழுவதும் ஒரே மாதிரியான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல் சமர்ப்பித்திட வேண்டும். புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலமாக மனவளர்ச்சி குறைபாடுடையோர், 75 சதவீதம் மற்றும் அதற்கு மேல் கை, கால் கடுமையாக பாதிக்கப்பட்ட தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் என மொத்தம் 6,141 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.2 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயனடைந்து வரும் 5 வகையான மாற்றுத்திறனாளிகள் உயிருடன் உள்ளனரா?, வெளியூர் சென்று விட்டனரா?, என்பதை ஆய்வு செய்திட ஏதுவாக தங்கள் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் உயிருடன் உள்ளார் என வாழ்நாள் சான்று பெற்றும் அத்துடன் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வருகிற 15-ந் தேதிக்குள் மாற்றுத்திறனாளியின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலமாக ஒப்படைத்திட வேண்டும் என மாவட்ட கலெக்டர் கவிதாராமு தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments