மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு 10 கிராம் எடையுள்ள தங்க பதக்கம், ரூ.25 ஆயிரம் ரொக்கபரிசுடன் கூடிய சான்றிதழ், சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசுடன் கூடிய பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளன. இதேபோல் மாற்றுத்திறனாளிகள் நலனிற்காக பணியாற்றிய சிறந்த டாக்டருக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசுடன் கூடிய பாராட்டு சான்றிதழ் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிகளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனத்திற்கு 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், ரூ.10 ஆயிரம் பரிசுடன் கூடிய பாராட்டு சான்றிதழ் மற்றும் சிறந்த சமூகப்பணியாளருக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசுடன் கூடிய பாராட்டு சான்றிதழ் ஆகிய விருதுகள் வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி சுதந்திர தின விழா அன்று முதல்-அமைச்சரால் வழங்கப்பட உள்ளன. எனவே தகுதியானவர்கள் விருதுகளுக்கான விண்ணப்ப படிவங்களை புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடமிருந்து பெற்று, பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ்களுடன் வருகிற 10-ந் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.