கோட்டைப்பட்டினம் மீனவர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் இன்று மீன் பிடிக்க செல்கின்றனர்




        புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் மானிய விலை டீசல் சரிவர கிடைக்காததால் அதிகாரிகளை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அதிகாரிகள் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் இனிவரும் காலங்களில் மானிய விலையில் டீசல் மீனவர்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்க அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தனர்.
தற்போது மானிய டீசல் பங்கில் மீனவர்களுக்கு கொடுக்கும் அளவுக்கு டீசல் வந்துள்ளது. இதனால் புதுக்கோட்டை மாவட்ட கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் தங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இதையடுத்து மீனவர்கள் இன்று (திங்கட்கிழமை) கடலுக்குள் மீன் பிடிக்க செல்கின்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments