திருநெல்வேலி தாம்பரம் இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
திருநெல்வேலி தாம்பரம் இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
கீழ்க்கண்ட சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் இயக்கப்படுகிறது. திருநெல்வேலி-தாம்பரம் (வண்டி எண்:06004) இடையே இரவு 7 மணிக்கு புறப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற ஆகஸ்ட் 7-ந்தேதி, 14-ந்தேதி, 21-ந்தேதி, 28-ந்தேதி மற்றும் செப்டம்பர் 4-ந்தேதிகளில் இயக்கப்படும்.
மறுமார்க்கமாக தாம்பரம்-திருநெல்வேலி (06003) இடையே இரவு 10.20 மணிக்கு புறப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற ஆகஸ்ட் 8-ந்தேதி, 15-ந்தேதி, 22-ந்தேதி, 29-ந்தேதி மற்றும் செப்டம்பர் 5-ந்தேதிகளில் இயக்கப்படும்.
விசாகப்பட்டினம்-பெங்களூரு(08543) இடையே மதியம் 3.55 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற ஆகஸ்ட் 7-ந்தேதி, 14-ந்தேதி, 21-ந்தேதி, 28-ந்தேதி மற்றும் செப்டம்பர் 4-ந்தேதி, 11-ந்தேதி, 18-ந்தேதி, 25-ந்தேதிகளில் இயக்கப்படும்.
மறுமார்க்கமாக பெங்களூரு-விசாகப்பட்டினம்(08544) இடையே மதியம் 2.50 மணிக்கும் புறப்படும் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற ஆகஸ்ட் 8-ந்தேதி, 15-ந்தேதி, 22-ந்தேதி, 29-ந்தேதி மற்றும் 5-ந்தேதி, 12-ந்தேதி, 19-ந்தேதி, 26-ந்தேதிகளில் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.