புதுக்கோட்டை மாவட்டம், சேந்தாக்குடி ஊராட்சியின் தலைவராக இருப்பவர் தமிழரசன். இவர் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர். இந்நிலையில் அந்த ஊராட்சிக்கு உட்பட்ட கீழையூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் கடந்த 3 ஆண்டுகளாக சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாவின் போது தன்னை கொடியேற்ற விடாமல் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் தடுப்பதாகவும், இதேபோல் கடந்த சுதந்திர தின விழா அன்றும் கொடியேற்ற விடாமல் தடுத்ததாகவும் ஊராட்சி மன்ற தலைவர் சமூக வலைதளங்களில் பதிவிட் டிருந்தார். இதுதொடர்பாக தாசில்தார் செந்தில் நாயகி தலைமையில் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதில் சுமூக தீர்வு காணப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இதில் உடன்பாடு ஏற்படாமல் இருந்து வந்தது. இந்த தகவல் மாவட்ட கலெக்டர் கவிதா ராமுவின் கவனத்திற்கும் சென்றது. இதையடுத்து கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட கீழையூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசன் தேசிய கொடிேயற்றினார். சேந்தாக்குடி ஊராட்சி மன்ற தலைவர் கூறுகையில், மாவட்ட கலெக்டர் நேரில் வந்து தன்னை பள்ளியில் கொடியேற்ற வைத்துள்ளது தனக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார். இதில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி செல்வி உள்பட அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.