திருமயம் பகுதிகளில் தீர்க்கப்படாத குடிநீர், சாலை பிரச்சினைகளுக்கு தீர்வு -தலைவர் சிக்கந்தருக்கு மக்கள் பாராட்டு




கிணறுகள், மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள், அடிகுழாய்கள் உள்ளிட்டவை செயலற்ற நிலையில் கிடந் ததோடு, பொதுமக்கள் தண்ணீருக்காக பல மைல் தூரம் செல்லும் நிலை இருந்தது. திருமயம் பஞ்சாயத்தை விரைவில் அனைத்து அடிப்படை வசதிகளையும் கொண்டுள்ள தன்னிறைவு பெற்ற பஞ்சாயத்தாக மாற்றும் அளவில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை திறம்பட நிறைவேற்றி வருகிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பஞ்சாயத்து தலைவராக கடந்த உள்ளாட்சிதேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சிக்கந்தர். அவர் பொறுப்பேற்றது முதல் இந்த பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தீர்க்க முடியாத நிலையில் இருந்த பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வு கண்டு வருகிறார்.

குறிப்பாக அப்பகுதி பொதுமக்கள் நலன் கருதி கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பயனற்று கிடந்த பல்வேறு நீர் நிலைகளை சரி செய்து மேம்படுத்தி இன்று மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளார்.

கிணறுகள், மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள், அடிகுழாய்கள் உள்ளிட்டவை செயலற்ற நிலையில் கிடந் ததோடு, பொதுமக்கள் தண்ணீருக்காக பல மைல் தூரம் செல்லும் நிலை இருந் தது. தேர்தல் சமயத்தில் தனது வாக்குறுதிகளில் முக்கியத்துவம் கொடுத்து பிரசாரம் செய்த பஞ்சாயத்து தலைவர் சிக்கந்தர், தான் வெற்றி பெற்றது முதல் அந்த வாக்குறுதிகளை திறம்பட கையாண்டு நிறைவேற்றி வருகிறார்.


மக்களின் அன்றாட அடிப்படை தேவைகளை நிறைவேற்றித்தரும் பொருட்டு பிரச்சினைகள் உள்ள பகுதிகளை நேரடியாக சென்று பார்வையிட்டு கள ஆய்வு செய்து அதனை சரி செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற் கொண்டு வருகிறார்.

அதிலும் 100 ஆண்டுகளுக் கும் மேலாக பல்வேறு கட்சி தலைவர்கள், கலெக்டர்கள், அதிகாரிகள் பெயரளவிற்கு பார்வையிட்டு சென்ற பயன் பாடற்ற நீர் நிலைகளை இன்று பயன்பாட்டுக்கு கொண்டு வந்த தனித்துவம் பெற்றுள்ள பஞ்சாயத்து தலைவர் சிக்கந்தர், பாழடைந்த கிணறுகளை உரிய முறையில் தூர் வாரி, குப்பைகளை அகற்றி அதன் கட்டமைப்புகளை மேம்படுத்தி பொதுமக்கள் இன்று பயன்படுத்தும் வகையில் சரிசெய்து கொடுத்துள் ளார்.

தண்ணீருக்காக பல மைல் தூரம் நடந்த திருமயம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதி பொதுமக்கள் தங்கள் வீட்டின் அருகிலேயே குடிநீர் பிடித்தும், எடுத்துக் கொள்ளும் நிலைக்கு வந் துள்ளனர். அதேபோல் குண்டும், குழியுமாக, மழை காலங்களில் சேறும், சகதியுமாக மாறி பயன்படுத்த முடியாத அளவில் இருந்த மகமாயிபுரம், அம்பாள்புரம் பகுதிகளில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக தார்ச்சாலைகளை பஞ்சாயத்து தலைவர் சிக்கந் தர் அமைத்து கொடுத் துள் ளார். இது பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் பல இடங்களில் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் சாலைகளிலும், குடியிருப்புகளை சூழ்ந்து கொண்டு தொற்று நோய்களை பரப்பி வந்ததை சரிசெய்யும் வகையில் அதிரடி நடவடிக்கை எடுத்த சிக்கந்தர், அகில்துறை, சந்தைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கழிவுநீர் வடிகால் அமைத்து தந்துள்ளார். திருமயம் பஞ்சாயத்தை விரைவில் அனைத்து அடிப்படை வசதிகளையும் கொண்டுள்ள தன்னிறைவு பெற்ற பஞ்சாயத்தாக மாற்றும் அளவில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை திறம்பட நிறைவேற்றி வருகிறார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments