மணமேல்குடி அருகே நாட்டுப்படகில் டீசல் தீர்ந்து போனதால் நடுக்கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.
நாட்டுப்படகில்...
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே பொன்னகரம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 40). இவருக்கு சொந்தமான நாட்டுப்படகில், இவரும், அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (30), விநாயகம் (30) மணி (35) ஆகிய 4 பேரும் கடந்த 9-ந் தேதி மதியம் 3 மணியளவில் பொன்னகரம் நாட்டுப்படகு மீன்பிடி தளத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இந்நிலையில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் நேற்று முன்தினம் அதிகாலை கரைக்கு திரும்ப தொடங்கினர். இதில் மூர்த்தி படகில் சென்ற 4 பேரும் படகுடன் நேற்று முன்தினம் மாலை வரையும் கரைக்கு திரும்பவில்லை.
மீனவர்கள் மாயம்
இதனால் அதிர்ச்சியடைந்த மீனவ குடும்பத்தினர் மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசாரும், சக மீனவர்களும் படகின் மூலம் கடலுக்கு சென்று மாயமான மீனவர்களை தேடினர். ஆனால் இரவு நேரம் ஆகிவிட்டதால் மீனவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் தேடுதல் பணியை நிறுத்தி விட்டு போலீசார் மற்றும் சக மீனவர்கள் கரைக்கு திரும்பினர்.
மீன்வளத்துறையினர் கடலில் காற்றின் வேகம் காரணமாக நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என கூறியும், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றது குறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
4 பேர் மீட்பு
இந்நிலையில் நேற்று அதிகாலை மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் சக மீனவர்கள் விசைப்படகில் சென்று கடலில் தேடினர். அப்போது கடலில் சுமார் 7 நாட்டிகல் மைல் தொலைவில் நாட்டுப்படகு டீசல் இல்லமால் நின்றுள்ளது. இதனால் மீனவர்கள் இரவு முழுவதும் படகில் தத்தளித்துள்ளனர். மேலும் தங்களை யாராவது காப்பாற்ற வருவார்களா? என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர்.
இதையடுத்து 4 மீனவர்களுடன், படகையும் மீட்ட போலீசார் கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் மீனவர்கள் 4 பேரையும் சிகிச்சைக்கு மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து கடலோ ரபாதுகாப்பு குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.