புதுக்கோட்டை-திருச்சி வழித்தடத்தில் ரெயில்களின் வேகம் அதிகரிக்க முடிவு! விரைவில் அமலுக்கு வரும் என தகவல்!!



காரைக்குடி- புதுக்கோட்டை-திருச்சி ரெயில்வே வழித்தடத்தில் தண்டவாள பாதைகள் சமீபத்தில் மின்மயமாக்கப்பட்டன. இதையடுத்து இந்த வழித்தடத்தில் மின்சார என்ஜின் பொருத்தப்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

புதுக்கோட்டை-திருச்சி ரெயில்வே தண்டவாள பாதையில் ரெயில்களின் வேகம் 90 கிலோ மீட்டர் ஆக உள்ளது. இதனை 100 கிலோ மீட்டர் வேகமாக உயர்த்த ரெயில்வே அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கான சோதனை ஓட்டம் சமீபத்தில் நடந்துள்ளது. இதில் வெற்றிகரமாக ரெயில் இயக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து புதுக்கோட்டை-திருச்சி இடையே ரெயில்களின் வேகம் 100 கிலோ மீட்டர் ஆக உயர்த்தப்பட்டு விரைவில் அமலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் பயணிகளுக்கான எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயண நேரம் சுமார் 10 நிமிடங்கள் குறைய வாய்ப்பு உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments