அதிராம்பட்டினத்தில் ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பரிதாப மரனம்



        தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் நரசிங்கபுரம் ஊராட்சிக்குட்பட்ட வள்ளிகொல்லை காடு கிராமத்தை சேர்ந்தவர் திருமாறன். இவருடைய மகன் வைரமுத்து (வயது19). இவர் அதிராம்பட்டினத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி முதல் ஆண்டு படித்து வந்தார்.
அதே பகுதியை சேர்ந்த மணிமாறன் மகன் நித்திஷ் என்ற வைரக்குமார்(16). இவர் 11-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மதியம் இவர்கள் இருவரும், அதே பகுதியை சேர்ந்த இளைஞர்களுடன் சேர்ந்து ஆவணி ஞாயிற்றுக்கிழமையையொட்டி ஒரு கோவிலில் சாமி கும்பிடுவதற்காக கருங்குளம் நசுவனி ஆற்றுக்கு சென்று குளித்தனர். அப்போது நித்திஷ் ஆற்றில் மூழ்கினார். உடனே அவரை காப்பாற்ற வைரமுத்து முயன்றார். அப்போது அவரும் ஆற்றில் மூழ்கினார். இதைக்கண்ட இளைஞர்கள் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டனர். இவர்களது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து ஆற்றில் இறங்கி அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது இறந்த நிலையில் வைரமுத்துவை மீட்டனர். நித்திசை தேடினர். . 6 மணிநேர தேடலுக்கு பிறகு நித்திசை பிணமாக மீட்டனர்.

இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments