
மணமேல்குடி வட்டத்தில் நடைபெற்ற குறு வட்ட விளையாட்டு போட்டிகளில் ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி சார்பாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ/மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (14-09-2022) நடைபெற்றது. நிகழ்விற்கு பள்ளித் தலைமையாசிரியர் தலைமையேற்றார். சிறப்பு விருந்தினராக இந்தியன் வங்கி ஆவுடையார்கோவில் கிளை மேலாளர் கார்த்திக் கலந்து கொண்டு சான்றிதழ்களையும் பதக்கங்களையும் வழங்கினார்.
இதில் 19 வயதிற்கு உட்பட்ட பிரிவினருக்கான குழு போட்டியில் நீலமேகம் தலைமையிலான ஆண்கள் அணி கோ கோ போட்டியில் முதலிடமும், அபிநயா தலைமையிலான பெண்கள் அணி கபாடி போட்டியில் முதலிடமும், பேட்மிண்டன் டபுள்ஸில் இரண்டாமிடமும், சிங்கிள்ஸில் முதலிடமும் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
மேலும் ஓட்டப்பந்தயம், டிரிபிள் ஜம்ப், நீளம் தாண்டுதல், தொடர் ஓட்டம் போன்ற தனிநபர் போட்டிகளில் முதிலிடம் பிடித்து 11 தங்க பதக்கங்களையும், இரண்டாமிடம் பிடித்து 17 வெள்ளி பதக்கங்களையும், மூன்றாம் இடம்பிடித்து 13 வெண்கலப் பதக்கங்களையும் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். ஒட்டுமொத்த பதக்கப்பட்டியலில் ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளது. வெற்றிக்காக பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் பாக்கியராஜ் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர் நண்பர்களுக்கும் பள்ளியின் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர் பெருமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.