‘நீட்’ தேர்வுக்கு ஆரம்பத்தில் இருந்தே தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு, அதற்கான மசோதாவையும் சட்டசபையில் நிறைவேற்றி ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.
எதிர்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வை அரசு பள்ளி மாணவர்கள் உள்பட தமிழக மாணவர்கள் எதிர்கொண்டுதான் வருகின்றனர்.நடப்பு ஆண்டில் நீட் தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவர்கள் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை என்று தேர்வு முடிவு வெளியான பிறகு கூறப்பட்டது. தேர்வை எதிர்கொண்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி முறையாக வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் பெருமளவில் முன்வைக்கப்பட்டது.இந்த நிலையில், நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்கும் வரையில், அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்பை முறைப்படுத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அந்தவகையில் ஏற்கனவே வழங்கப்படும் நீட் தேர்வு பயிற்சி வகுப்புடன், திறன் மிக்க ஆசிரியர்களை கொண்டு தொழில்நுட்ப வசதிகளுடன் நீட் தேர்வுக்கான மேம்பட்ட பயிற்சியை அடுத்த மாதம் (அக்டோபர்) முதல் தொடங்க இருப்பதாகவும் நேற்று பரபரப்பாக பேசப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.