உள்ளாட்சி தேர்தல் முன் விரோதத்தில் காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
காங்கிரஸ் பிரமுகர்
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே கணபதிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 49). இவர் காங்கிரஸ் கட்சியின் ஒன்றிய தலைவராக இருந்து வந்தார். இவர் கடந்த 3-11-2012 அன்று கணபதிபுரம் அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஆதனக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனந்தராஜ் இதற்கு முன்பு கணபதிபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வந்ததும், அதன்பின் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அவரது மனைவி போட்டியிட்டு வெற்றி பெற்றதும், இதில் தேர்தல் முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக கணபதிபுரத்தை சேர்ந்த இளையராஜா (39), முத்து (50), பிரகாஷ் (35), ஆசைத்தம்பி (44), திருநாவுக்கரசு (30), குட்டிமணி (39), மதி (49), கருணாநிதி (48), மார்கண்டையன் (48), திருச்சி பொன்மலை ரெயில்வே வடக்கு காலனியை சேர்ந்த பாஸ்கர் (25), திருச்சி குப்பாங்குளத்தை சேர்ந்த மதன்குமார் (26) திருச்சியை சேர்ந்த மாரியப்பன் (23) ஆகிய 12 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
ஆயுள் தண்டனை
இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பாபுலால் நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் இளையராஜா, முத்து ஆகியோருக்கு தலா 2 பிரிவுகளில் தலா ஒரு ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனையும், இதனை 2 பேரும் ஏக காலத்தில் அனுபவிக்குமாறும், பாஸ்கர், மதன்குமார், மாரியப்பன் ஆகிய 3 பேருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மற்ற 7 பேர் மீதும் குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்து உத்தரவிட்டார். இதையடுத்து தண்டனை விதிக்கப்பட்ட 5 பேரையும் திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் பலத்த பாதுகாப்புடன் வேனில் அழைத்து சென்றனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி வாதாடினார்.
பல்வேறு வழக்குகள் நிலுவை
இந்த வழக்கில் திறம்பட புலன்விசாரணை செய்த இன்ஸ்பெக்டர்கள் சுப்புலட்சுமி, செந்தில்மாறன், கோர்ட்டு பணி ஏட்டு பாக்கியலட்சுமி ஆகியோரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே பாராட்டினார். இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பாஸ்கர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.